எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு.. குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை!

 

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு.. குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட 
வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக்கை என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட 
வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக்கை என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் என்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. அந்த இரண்டுபேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அவர்களிடம் காவலர் வில்சனை கொலை செய்ததற்கு முக்கிய ஆதாரமான கத்தி மற்றும் துப்பாக்கி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

ttnn

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கேரளாவில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த துப்பாக்கி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் பேருந்து நிலையத்தின் அருகே அதனை வீசிய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து, இருவரையும் காயல் பட்டினத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களுக்குத் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தனர்.