எழுத்தாளர் பொன்னீலன் உடல் நலக்குறைவு…! கொரோனாவை விட கொடூரமான அரசின் கட்டுப்பாடுகள்!!

 

எழுத்தாளர் பொன்னீலன் உடல் நலக்குறைவு…! கொரோனாவை விட கொடூரமான அரசின் கட்டுப்பாடுகள்!!

நாகர்கோவில் அருகில் உள்ள மணிக்கட்டி பொட்டல் என்ற ஊர்தான் மூத்த எழுத்தாளரான பொன்னீலனின் சொந்த ஊர். அவர் வாழும் பகுதியில் ஒருவருக்கு கொரோனா என்பதால் அவர் வீடு உள்ளடங்கிய பகுதியை பூட்டி விட்டார்கள். அவரால் மாதக்கணக்கில் வெளிவர முடியாத நிலையில் ஜவஹர் அவ்வப்போது சென்று அவருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து வந்திருக்கிறார். ஆனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்திருக்கிறார். 

இந்நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பூட்டப்பட்ட இடத்திற்குள் இருந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதற்குள் போதும் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக சுற்றியிருந்த நண்பர்கள் கூறுகிறார்கள். இப்போது அவர் களியக்காவிளை அருகில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது துணைவியார் பூட்டப்பட்ட ஏரியாவுக்குள் இருக்கும் வீட்டிற்குள் தனிமையில் சிக்கியுள்ளார். அவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் போலீஸ் அனுமதிக்க வேண்டும் என சொல்கிறார்களாம். 

எழுத்தாளர் பொன்னீலன்

இதையெல்லாம் பார்க்கும்போது கொரோனா முதியவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி முதியவர்களை துன்புறுத்துகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த பிரச்னையில் குமரி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே அவர்களுக்கு உரிய உதவிகள் சேர ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.