’எல்லோருமே மேலாடையில்லாத சேலை அணியலாம்’… ப்ரியங்களுடன் ப்ரியங்கா சோப்ரா தரும் டிப்ஸ்…

 

’எல்லோருமே மேலாடையில்லாத சேலை அணியலாம்’… ப்ரியங்களுடன் ப்ரியங்கா சோப்ரா தரும் டிப்ஸ்…

சமீபத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ப்ரியங்கா சோப்ராவின் மேலாடையில்லாத சேலை  குறித்து நடிகையும் அவரது காஸ்ட்யூமரும் ‘வேலு நாயக்கரே இனிமே எல்லா பொண்ணுங்களும் இப்பிடித்தான் ட்ரெஸ் பண்ணவிரும்புவாங்க’என்பதுபோல் சர்வ சாதாரணமாக பதில் அளிக்கிறார்கள்.

சமீபத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ப்ரியங்கா சோப்ராவின் மேலாடையில்லாத சேலை  குறித்து நடிகையும் அவரது காஸ்ட்யூமரும் ‘வேலு நாயக்கரே இனிமே எல்லா பொண்ணுங்களும் இப்பிடித்தான் ட்ரெஸ் பண்ணவிரும்புவாங்க’என்பதுபோல் சர்வ சாதாரணமாக பதில் அளிக்கிறார்கள்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இன்ஸ்டைல்(InStyle) ஃபேஷன் இதழின் சமீபத்திய பதிப்பின் அட்டைப் படமாக பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடையின்றி சேலை அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதில் உள்ள தலைப்புச் செய்தியில் ‘இந்த உலகத்தை இன்னும் ஒரு படி மேலே நகர்த்த விரும்புகிறேன்’ என்ற தலைப்பில் ப்ரியங்கா பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் புகைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும், கடுமையான எதிர்ப்புகளும் எழுந்தன. நெட்டிசன்கள் பலரும் அந்த உடை ஆபாசமாக உள்ளதாக கருத்து பதிவிட்டனர்.

இந்த நிலையில், மிட்-டே(Mid-day) என்ற இணையத்துக்கு பேட்டியளித்த மேலாடையில்லாத சேலையின் உடை வடிவமைப்பாளர் தருன் தஹிலானி, ‘அந்தச் சேலையில் எந்த ஆபாசமும் இல்லை. மேலைடையில்லாத சேலைதான் தற்போது உலக செய்தியாக உள்ளது. அந்த இதழின் அட்டைப் படம், பிரியங்கா சோப்ராவின் மயக்கும் அழகால்தான் பேசப்படுகிறது. பிரியங்கா சோப்ரா, மாடர்ன் இந்தியாவின் அடையாளம்’ என்று தெரிவித்துள்ளார். இந்தச் சேலை குறித்து தெரிவித்திருந்த பிரியங்கா சோப்ரா, ‘இந்தச் சேலை எனக்கு விருப்பமான உடைகளில் ஒன்று. மிக விரைவில் அதிக அளவிலான பெண்கள் இதே ஸ்டைலில் ஆடை அணிய விரும்புவார்கள்’ என்று உசுப்பேத்திவிட்டிருக்கிறார்.

சேலையில் இப்படி ஒரு புரட்சி செய்யவிரும்பும் ப்ரியங்கா, எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக ஆசைப்படுவது அனைவரும் அறிந்தது.