“எல்லா புகழும் இ.பி.எஸ்க்கு தான்” : பாலியல் புகார்களில் தேடப்பட்டு வரும் கைலாசா தலைவன் நித்தியின் கூல் ட்வீட்!
நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறைக்குத் தண்ணீர் காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார்.
அவரை கடந்த ஆண்டே கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்து வருகின்றன. அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு யார் உதவி செய்கிறார்கள் என்று எதுவுமே கண்டுபிடிக்கப் படாத நிலையில் கரெக்டாக அந்தந்த சூழலுக்கு தகுந்தாற்போல வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட, கொரோனா வைரஸ் எங்களைத் தாக்காது. எங்களைப் பாதுகாக்கப் பரமசிவன் இருக்கிறார், காலபைரவர் பாதுகாவலராக இருக்கிறார். எந்த காலத்திலும் எங்களுக்கு கொரோனா வராது என்று கூறி ஒரு காணொளி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து தமிழக மக்களை காக்க எடப்பாடி எடுத்து வரும் முயற்சி குறித்து நித்தியானந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,’ கொரோனா தமிழக அரசாங்கத்தால் முழுமையாக கட்டுப்படுத்தப்படுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சுகாதாரப் பாதுகாப்பு, நல்ல நிர்வாகம் மற்றும் மக்களின் கலாச்சாரம் ஆகியவற்றின் வலுவான அடித்தளமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மொத்த புகழும் எடப்பாடி பழனிசாமிக்கு தான். பரமசிவ பகவான் அனைவரையும் காப்பாற்றுவார்.” என்று பதிவிட்டுள்ளார். நித்தி எங்கே என்று போலீசார் தீவிரமாகத் தேடி வருகையில் இவர் எங்கேயோ தலைமறைவாக இருந்து கொண்டு கூலாக கொரோனா பற்றி ட்வீட் போட்டு வருகிறார்.
I am very happy to seeing the CORONA is completely controlling by TN government. The strong basement of health care, good administration and the culture of the people are the main reason behind this success. Kudos to EPS. Lord PARAMASIVA will save all.
– Said by @SriKailashPmo— PMO Kailaash (@SriKailashPmo) March 17, 2020