எல்லாம் போச்சு… ஓ.பி.எஸை டம்மி பீஸாக்கும் எடப்பாடி..!

 

எல்லாம் போச்சு… ஓ.பி.எஸை டம்மி பீஸாக்கும் எடப்பாடி..!

ஓ.பிஎஸ் அதிர்ச்சி அடைந்து அமைதிகாத்து வருவதாக அவரது அடிபொடிகள் பவர் போச்சே என்று புலம்பி வருகிறார்கள்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்  அதிகார வரம்பில் கை வைக்கப்பட்ட விவகாரம் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓபிஎஸ் கையில்  இருந்த உள்ளூர் திட்டக் குழுமத்தின் அதிகாரம் சுருக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகக்கூறப்படுகிறது. அதாவது குடியிருப்பு கட்டிடங்கள் 4 ஆயிரம் சதுர அடி வரை கட்டுவதற்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கும் அதிகாரம் இருந்தது. 

4 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. சமீபத்தில் 4 ஆயிரம் சதுர அடி என்பதை உயர்த்தி 7 ஆயிரம் சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடம் கட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓ.பிஎஸ் வசம் பொறுப்பிலுள்ள உள்ளூர் திட்ட குழும அதிகாரம் சுருக்கப்பட்டு, அந்த அதிகாரம் அமைச்சர் வேலுமணி பொறுப்பில் உள்ள உள்ளாட்சி துறைக்கு கூடுதலாக அள்ளி வழங்கப்பட்டு உள்ளது.  இந்த விவகாரத்தால் ஓ.பிஎஸ் அதிர்ச்சி அடைந்து அமைதிகாத்து வருவதாக அவரது அடிபொடிகள் பவர் போச்சே என்று புலம்பி வருகிறார்கள்.