எருக்கம்பால் கொடுத்து பெண் குழந்தையை கொன்ற கொடூரம்: பெற்றோர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்!

 

எருக்கம்பால் கொடுத்து பெண் குழந்தையை கொன்ற கொடூரம்: பெற்றோர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்!

குழந்தை  உயிரிழந்ததாகக் கூறிய வைரமுருகன் சௌமியா தம்பதி குழந்தையை வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தின் கீழ் புதைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள புள்ளநேரியை சேர்ந்தவர்  வைரமுருகன். இவருக்கு சௌமியா என்ற மனைவியும் இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இதையடுத்து  சௌமியா மீண்டும் கர்ப்பம் தரித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் பெண்  குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.  இதையடுத்து  கடந்த 2 ஆம் தேதி அக்குழந்தை  உயிரிழந்ததாகக் கூறிய வைரமுருகன் சௌமியா தம்பதி குழந்தையை வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தின் கீழ் புதைத்தனர். இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீஸுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்தியதில்  பெற்றோர்களே 30 நாள் ஆன பெண் சிசுவை கொலை செய்தது தெரியவந்தது.

 


 

இதைத்தொடர்ந்து குழந்தையின்  வைரமுருகன், சௌமியா மற்றும் குழந்தையின் தாத்தா சிங்கத்தேவர் ஆகிய 3 பேர் மீதும்  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்  அவர்களைக் கைது செய்தனர். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த பின் மீண்டும் அதே இடத்தில் குழந்தையை புதைத்தனர். 

 

இந்நிலையில் கைதான குழந்தையின் பெற்றோர் அளித்த வாக்குமூலத்தில், வறுமை காரணமாக ஒரு மாத பெண் குழந்தையை எருக்கம்பால் கொடுத்து கொன்றதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளனர்.