எய்ட்ஸ் என்று கூறி மணமகள் வீட்டை அலற வைத்த மாப்பிள்ளை! – அள்ளிச்சென்ற போலீஸ்

 

எய்ட்ஸ் என்று கூறி மணமகள் வீட்டை அலற வைத்த மாப்பிள்ளை! – அள்ளிச்சென்ற போலீஸ்

பெங்களுருரில் திருமணம் பிடிக்காததால் “தனக்கு எய்ட்ஸ் உள்ளதால் திருமணம் வேண்டாம்” என்று கூறி மணமகள் வீட்டாரை அலறவைத்த மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

arrest

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் கிரண் குமார். இவருக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து பெண் தேடியுள்ளனர். பெண் பார்க்கும் படலம் முடிந்து, திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. அதுவரை அமைதியாக இருந்த கிரண் குமார், பெண்ணின் வீட்டுக்கு போன் செய்து, தனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாகவும், தன்னை திருமணம் செய்தால் உங்கள் பெண்ணின் வாழ்க்கை பாதிப்படையும் என்றும் கூறியுள்ளார்.

image

திருமணத்துக்கு ஒரு சில நாட்கள் உள்ள நிலையில் மாப்பிள்ளை இப்படி கூறுகிறாரே என்று மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திருமணமும் நிறுத்தப்பட்டது. கிரண் குமார் மீது வீணாக தவறான தகவலை பரப்பியதாக மாப்பிள்ளை வீட்டார் கோபப்பட்டனர். எனவே, கிரண் குமாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை முடிவுகள் கிரணுக்கு எய்ட்ஸ் இல்லை என்பதை உறுதி செய்தது. இதனால், மணமகள் வீட்டில் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. 

image

பிறகு கிரண் குமாரிடம் துருவித் துருவி விசாரித்த போது, மணமகள் வீட்டாருக்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்று குறிப்பிட்டதை ஒப்புக்கொண்டார். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் இப்படி செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் மணப்பெண் வீட்டாருக்குத் தெரியவந்துள்ளது. அவர்கள் தங்களை ஏமாற்றி செலவு செய்ய வைத்துவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதனால், கிரண் குமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைதும் செய்துள்ளனர்.