எம்.ஜி.ஆர் ஊழல்வாதிகளை உருவாக்கியுள்ளார்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

 

எம்.ஜி.ஆர் ஊழல்வாதிகளை உருவாக்கியுள்ளார்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

எம்.ஜி.ஆர் லட்சக்கணக்கான ஊழல்வாதிகளை உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

சென்னை: எம்.ஜி.ஆர் லட்சக்கணக்கான ஊழல்வாதிகளை உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

பாமக கட்சியின் மாணவரணி கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் லட்சக்கணக்கான ஊழல்வாதிகளை  உருவாக்கிவிட்டு சென்றுள்ளார். அடுத்த 200 வருடங்களுக்கு பிறகு தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என சிந்திப்பவர் ராமதாஸ். சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிக்கு வந்திருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள் என பேசினார்.