எம்.எஸ்.வி, வாலி உள்ளிட்டோருக்கு சிலை வேண்டும்- ஏ.ஆர். ரஹ்மான்! 

 

எம்.எஸ்.வி, வாலி உள்ளிட்டோருக்கு சிலை வேண்டும்- ஏ.ஆர். ரஹ்மான்! 

இசையமைப்பாளர் எம்எஸ்வி, பாடகர் டி எம். எஸ், பாடலாசிரியர் வாலிக்கு சென்னை நினைவு சின்னம் அமைக்க அரசு உதவ வேண்டும் என இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி வரும் 10ம் தேதி சென்னை YMCAவில் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியை நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்குகிறார். இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த இசையமைப்பாளரும், பாடகருமான இசைப்புயர் ஏ.ஆர். ரஹ்மான்,“சென்னையில் இந்த நிகழ்ச்சி நடத்துவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் தமிழ் பாடல்கள் அதிகம் உள்ளது, ஒரு சில ஹிந்தி பாடல்களும் இடம்பெறும். சுமார் 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

எம்.எஸ்.வி, வாலி உள்ளிட்டோருடன் பணியாற்றி உள்ளீர்கள் அவர்களுக்கு சிலை வைத்து பெருமைப்படுத்தும் எண்ணம் இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இசை அருங்காட்சியகமோ, சிலையோ அமைத்தால் நன்றாக இருக்கும் அதற்காக யோசித்து வருகிறோம். அரசு உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்” என தெரிவித்தார்.