எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து பாதியில் விலகினால் ரூ. 10 லட்சம் அபாரதம்!

 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து பாதியில் விலகினால் ரூ. 10 லட்சம் அபாரதம்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து பாதியில் விலகினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து பாதியில் விலகினால் ரூ. 10 லட்சம் அபாரதம்!

சென்னை:  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து பாதியில் விலகினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

medical

அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து பாதியில் விலகினால் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்கள், படிப்பைத் தொடர விரும்பாவிட்டால் இன்றுக்குள் (ஆகஸ்டு 3-ந் தேதி) கல்லூரியிலிருந்து விலகி அந்த இடங்களைத் திரும்ப ஒப்படைக்கலாம்.நாளை மற்றும் நாளை மறுநாள் கல்லூரியை விட்டு விலகும்பட்சத்தில் கலந்தாய்வின்போது அளிக்கப்பட்ட உறுதி சான்றின்படி ரூ. 1 லட்சம் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

ஆகஸ்டு 6-ந் தேதி அல்லது அதன்பிறகு கல்லூரிகளிலிருந்து விலகுபவர்கள் ரூ. 10 லட்சம் செலுத்த வேண்டும்.அதேபோல் பி.டி.எஸ். மருத்துவ இடங்களைப் பெற்றவர்கள் படிப்பைத் தொடர விரும்பாவிட்டால் நாளைக்குள் (4-ந் தேதி) தங்களது இடங்களைத் திரும்ப ஒப்படைக்கலாம்.ஆகஸ்டு 5 மற்றும் 6-ந் தேதிகளில் படிப்பைக் கைவிடும்பட்சத்தில் ரூ. 1 லட்சமும் அதன்பிறகு கல்லூரியிலிருந்து விலகினால் ரூ. 10 லட்சமும் அபராதம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.