எம்எல்ஏ வீட்டில் கைப்பற்றப்பட்ட ஏகே 47, வெடிகுண்டுகள்: அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

 

எம்எல்ஏ வீட்டில் கைப்பற்றப்பட்ட ஏகே 47, வெடிகுண்டுகள்: அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது.

எம்எல்ஏ வீட்டில் கைப்பற்றப்பட்ட ஏகே 47, வெடிகுண்டுகள்: அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

பீகார் : பீகாரில், எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மோகாமா  தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங். சுயேச்சை எம்.எல்.ஏவான இவரது வீட்டில்  ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில்   26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அவை செயலிழக்க வைக்கப்பட்டது. 

இதுகுறித்து  பாட்னா போலீஸ் எஸ்.பி கந்தேஷ் குமார் மிஸ்ரா கூறும் போது மாவோயிஸ்ட்டுகள், பயங்கரவாதிகள் வைத்திருக்கும் ஆயுதங்கள், எம்.எல்.ஏ.ஒருவரின் வீட்டில் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றார்.

இந்த வழக்கானது  தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.