‘எப்படியெல்லாம் திருடுறாங்கப்பா’.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?! : கையும் களவுமாக சிக்கிய டிஷர்ட் திருடன்!

 

‘எப்படியெல்லாம் திருடுறாங்கப்பா’.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?! : கையும் களவுமாக சிக்கிய டிஷர்ட் திருடன்!

இப்போதெல்லாம் புதிது புதிதான திருட்டு முறைகளைத் திருடர்கள் கையாளுகின்றனர்.

இப்போதெல்லாம் புதிது புதிதான திருட்டு முறைகளைத் திருடர்கள் கையாளுகின்றனர். அதனைப் பார்க்கும் போது, எப்படி இவர்களுக்கு இந்த ஐடியா தோன்றுகிறது என்று நமக்குள்ளே கேள்வி எழுகிறது. இதே போல, பெருமாநல்லூர் அருகே வித்தியாசமான முறையைக் கையாண்டு ஒருவர் டிஷர்ட் திருடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

ttn

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே உள்ள நேதாஜி அப்பரெல் பார்க்கில் பல பனியன் கம்பெனிகள் இருக்கின்றன. அதில், வேலை செய்யும் பெரும்பாலான நபர்கள் வட மாநிலத்தவர்கள் தான். அதில் உள்ள ஒரு கம்பெனியில் வட மாநில வாலிபர் ஒருவர் விலை மதிப்புடைய பல டிஷர்டுகளை தனது ஆடைக்குள் மறைத்து, அது கீழே விழாமல் இருக்க கயிற்றை வைத்துக் கட்டி, பக்காவாக பிளான் போட்டுத் திருடியுள்ளார். 

ttb

வழக்கமாக கம்பெனியின் கேட்டில் சோதனை செய்த செக்யூரிட்டி, அவரை பார்த்து சந்தேகம் அடைந்து துணியைக் கழட்டச் சொல்லியுள்ளார். அப்போது அவரின் ஆடைக்குள்ளே இருந்து சுமார் 40 விலை உயர்ந்த டிஷர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவரை எச்சரிக்கை செய்து கம்பெனி அதிகாரிகள் வேலையை விட்டு அனுப்பியுள்ளனர். அந்த நபர் எப்படி துணியை ஒளித்து வைத்திருந்தார் என்ற அனைத்தையும் அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.