‘என் வீட்டில் நான் பத்திரமாக இருக்கிறேன்’ : நடிகை கௌதமி ட்வீட்!

 

‘என் வீட்டில் நான் பத்திரமாக இருக்கிறேன்’ : நடிகை கௌதமி ட்வீட்!

நடிகை கௌதமியின் வீட்டிலும் தனிமைப்படுத்துதலுக்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களின் வீட்டில் சென்னை மாநகராட்சி தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டில் தனிமைப்படுத்தபட்ட வீடு என்று மாநகராட்சியினர் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால், சில மணி நேரங்களில் அந்த நோட்டீஸ் தனிமைப்படுத்துதலுக்கான அங்கிருந்து அகற்றப்பட்டது. அதனையடுத்து , நடிகை கௌதமியின் வீட்டிலும் தனிமைப்படுத்துதலுக்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

ttn

இது குறித்து நடிகை கௌதமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ எல்லாருக்கும் வணக்கம். நான் என் வீட்டில் பத்திரமாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். தான் பிப்ரவரி தொடக்கத்தில் தான் அமெரிக்கா சென்றதாகவும், அப்போது கொரோனா அச்சம் இல்லாததால் தன்னை யாரும் சோதனைக்கு உட்படுத்தவில்லை. 20 நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்ததில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என் வீட்டில் வசித்து வருகிறேன். என் வீட்டில் எந்த நோட்டீஸும் ஒட்டப்படவில்லை. எல்லாரும் அரசின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாக்கப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.