‘என் மனைவிகிட்ட பேசாதீங்க’ : தாடி பாலாஜியை மிரட்டும் முதல் மனைவியின் கணவர்!

 

‘என் மனைவிகிட்ட பேசாதீங்க’ : தாடி  பாலாஜியை  மிரட்டும் முதல் மனைவியின் கணவர்!

என் வீட்டுக்கு நீங்க வரதோ என் மனவிகிட்ட பேசுறதோ வேணாம். மீறி அத பண்ணா கண்டிப்பாக போலீசில் புகார் கொடுப்பேன்

நடிகர் தாடி பாலாஜி – நித்யா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. 

நகைச்சுவை நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருபவர்  நடிகர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்து வந்தார்.  பின்னர் பிக் பாஸ் மூலம் இருவரும் ஒன்றாகி விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டும் இருக்கும் சூழலில், மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். 

balaji

சிறிது நாட்கள் தாடி பாலாஜி நித்யா குறித்த எந்த செய்தியும் வெளிவராமல் இருந்ததால் இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள் என்று நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தாடி பாலாஜி குறித்த வீடியோ ஒன்று வெளியானது. அதில் பேசிய ராஜ் துரை என்பவர், ‘பாலாஜி உங்களால தான் என் குடும்பத்துல ரொம்ப பிரச்சினையா போயிட்டு இருக்கு. நீங்க தப்பு பண்ணுறீங்க. நான் தீபாவுக்கு பயந்து தான் பேசமா இருந்தேன். ஆனா நீங்க அவரை பத்தியே  தப்பா பேசுறீங்க. இதுக்கு மேலயாவது என் வீட்டுக்கு நீங்க வரதோ என் மனைவிகிட்ட பேசுறதோ வேணாம். மீறி அத பண்ணா கண்டிப்பாக போலீசில் புகார் கொடுப்பேன்’ என்று கூறியிருந்தார்.

balaji

தீபா யார் என்று பாலாஜியின் மனைவி நித்யா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘தீபா தான் பாலாஜியின் முதல் மனைவி. அவரை விவாகரத்து செய்துவிட்டு தான் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால்  அவர் தீபாவுடன் தொடர்பில் இருந்தது சமீபத்தில் தான் தெரிந்தது. முதல் மனைவியை பிடித்திருந்தால் அவருடனே வாழ்ந்து இருக்கலாமே? எதற்காக என் வாழ்க்கையில் குறுக்கீட்டார் என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

balaji

இதுகுறித்து  பேசியுள்ள தாடி பாலாஜியோ, ‘வீடியோவில் வந்த கேரக்டர் யாருனே எனக்கு தெரியாது. மறுபடியும் என் பேர  கெடுக்குற வேலையை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட பணம் இருக்கு. அத பறிக்கவே இந்த நாடகம். தில் இருந்தா  என் முன்னாடி வந்து பேசணும். நித்யா பிரெண்டுன்னு சொல்லிட்டு ஒரு சப்- இன்ஸ்பெக்டர் என்ன பயமுறுத்த பாக்குறாரு.அவர் தான் நித்யாவை வழிநடத்துறாரு.அதோட தொடர்ச்சி தான் இந்த வீடியோன்னு நினைக்குறேன்’ என்று தன் தரப்பை தெரிவித்துள்ளார்.