என் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி

 

என் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி

அடில் அஹமத் தீவிரவாதியாக மாற இந்திய இராணுவம்தான் காரணம் என அவரது தந்தை குலாம் தர் பேட்டியளித்துள்ளார்.

காஷ்மீர்: அடில் அஹமத் தீவிரவாதியாக மாற இந்திய இராணுவம்தான் காரணம் என அவரது தந்தை குலாம் தர் பேட்டியளித்துள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் இன்னும் பதட்டம் நிலவுகிறது, தீவிரவாதிகள் சிலரை என்கவுன்டர் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மனித வெடிகுண்டாய் செயல்பட்ட அடில் அஹமதின் தந்தை குலாம் தர், இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர், மூன்று வருடங்களுக்கு முன்பு என் மகனும் அவன் நண்பர்களும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். கற்கள் வீசியதாக கூறி அவனை தாக்கினார்கள். இதனை தாங்க முடியாத அவன், தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்திருக்கிறான். 

இராணுவ வீரர்களானாலும் சரி, தீவிரவாதிகளானாலும் சரி, எளிய மனிதர்களின் பிள்ளைகள்தான் இங்கே பலியாகிறார்ஙள். எனவே காஷ்மீர் பிரச்சனையை அரசாங்கம் பேசித் தீர்க்க முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.