‘என் பொண்டாட்டி கிட்ட உனக்கு என்னடா பேச்சு’ பக்கத்து வீட்டுக்காரரை அடித்து கொன்ற கணவர்!

 

‘என் பொண்டாட்டி கிட்ட உனக்கு என்னடா பேச்சு’ பக்கத்து வீட்டுக்காரரை அடித்து கொன்ற கணவர்!

மனைவியிடம் பேசி கொண்டிருந்தவரைக் கணவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அரியலூரில் அரங்கேறியுள்ளது. 

மனைவியிடம் பேசி கொண்டிருந்தவரைக் கணவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அரியலூரில் அரங்கேறியுள்ளது. 

ttn

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அதே பகுதியில் மனைவியுடன் வசித்து வருபவர் கொளஞ்சி. இந்நிலையில்  நேற்று ரவி கொளஞ்சியின்  மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொளஞ்சி என் மனைவியிடம் உனக்கு என்ன பேச்சு? என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.  இவர்களின் சண்டை கைகலப்பாக மாற, கொளஞ்சியின் குடும்பத்தினர் ரவியை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ரவியை அங்கிருந்தவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து ரவி மேல்சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார். 

ttn

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் கொளஞ்சி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.