என் படத்தில் ஜெயம் ரவி இல்லை: ராஜிவ் மேனன் பேட்டி

 

என் படத்தில் ஜெயம் ரவி இல்லை: ராஜிவ் மேனன் பேட்டி

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் வெளியாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சர்வம் தாளமயம் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இது அவரது சொந்த தயாரிப்பில் உருவான படம்.

இந்திய சினிமாவின் முன்னணி ஔிப்பதிவாளர்களில் ஒருவர் ராஜிவ் மேனன். இவர் மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார்.

ggdz

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் வெளியாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சர்வம் தாளமயம் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இது அவரது சொந்த தயாரிப்பில் உருவான படம்.

ஜிவி பிரகாஷ் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை என்றாலும், பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

gv

இது ராஜிவ் மேனனின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் அவர் ஜெயம் ரவியை வைத்து அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ராஜிவ் மேனன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

dbcgb

சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சர்வம் தாள மயம் படத்தை பார்த்து ஜெயம் ரவி பாராட்டினார். ஆனால் என்னுடைய அடுத்த படம் ஜெயம் ரவி உடன் என்பது வதந்தி. நான் இப்போதுதான் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் ஒர்க்கில் ஈடுபட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: கர்ப்பத்துடன் நீச்சல் அடிக்கும் சூர்யா பட நாயகி – வைரலாகும் புகைப்படம்