என் தெருவில் 2 நாட்களாக மின்சாரம் இல்லை! இதுதான் உங்கள் திறமையான ஆட்சியா ? தங்கமணியிடம் கேள்வி எழுப்பிய குஷ்பூ

 

என் தெருவில் 2 நாட்களாக மின்சாரம் இல்லை! இதுதான் உங்கள் திறமையான ஆட்சியா ? தங்கமணியிடம் கேள்வி எழுப்பிய குஷ்பூ

நான் வசிக்கும் சாந்தோம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லை என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்

என் தெருவில் 2 நாட்களாக மின்சாரம் இல்லை! இதுதான் உங்கள் திறமையான ஆட்சியா ? தங்கமணியிடம் கேள்வி எழுப்பிய குஷ்பூ

நான் வசிக்கும் சாந்தோம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லை என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் வச்க்கும் சாந்தோம் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு 48 மணி நேரம் ஆகிறது. இரண்டு நாட்களாகியும் சென்னை மின்சார வாரியம், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… இதனால் தெருவில் வசிக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து தாமதமின்றி சரிப்படுத்தப்படுமா? அதற்கு தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா என மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு டேக் செய்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அந்த ட்வீட்டை பார்த்த ராஜேஷ் என்பவர், சோலாருக்கு மாறிவிடுங்கள் குஷ்பு என குறிப்பிட்டுள்ளார். அதற்கு குஷ்பூ, நான் எனக்காக சொல்லவில்லை.. மின்சாரம் இல்லாததால் மொத்த தெருவும் பாதிக்கப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளார்.