‘என் தெய்வமே…என் கடவுளே’ 2 மாங்காய் மட்டும் திருடி கொள்ளவும்: வைரலாகும் பதாகை!

 

‘என் தெய்வமே…என் கடவுளே’  2 மாங்காய் மட்டும் திருடி கொள்ளவும்: வைரலாகும் பதாகை!

இந்த நியூஸ் படிக்கும் உங்களுக்கும் கூட வியப்பை  ஏற்படுத்துவார் என்பதில் துளியும் சந்தேகமுமில்லை.

என்னதான் காசு குடுத்து வாங்கி சாப்பிட்டாலும், திருட்டு மாங்காவுக்கு தனி டேஸ்ட் தான். அதனால் தான் பலரும் மாங்காயை கல்லால் அடிச்சி அதை மரத்தோட ஓனருக்கு தெரியாம எடுத்துட்டு போய்  ரசிச்சு ருசிச்சி சாப்பிடுவாங்க. அப்படி மாங்காய் திருடர்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வீடு வாசலில் பதாகை ஒன்று பார்ப்பவர்களை மட்டுமல்ல இந்த நியூஸ் படிக்கும் உங்களுக்கும் கூட வியப்பை  ஏற்படுத்துவார் என்பதில் துளியும் சந்தேகமுமில்லை.

ttn

 மாங்காய் திருடும் போது மாட்டிக்க போறோம்னு சிலர் அதை வேக வேகமாக இழுத்து அதன் கிளையையும் உடைச்சிடுவாங்க. அப்படி மரத்தின் கிளையை  உடைக்குறதால ஒருவர், மனம் நொந்து போய்  வச்ச பதாகை தான் இது.

ttn

அதில் கிளையை உடைக்காமல் திருடவும்…இரண்டு மாங்காய் மட்டும் திருடவும் என்று அச்சடித்து ஒட்டியிருக்கிறார். இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாக இதை கண்ட நெட்டிசன்கள் இவன் மனுஷன்யா என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.