என்.ஜி.கே.ஷூட்டிங் ஓவர்:படக்குழுவுக்கு ஒரு கிலோ தங்கத்தை பரிசளித்த சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் என்.ஜி.கே திரைப்படம் முடிவுஅடைந்தால் படக்குழுவினருக்கு ஒரு கிலோ தங்கத்தை பரிசளித்துள்ளார்
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் என்.ஜி.கே திரைப்படம் முடிவுஅடைந்தால் படக்குழுவினருக்கு ஒரு கிலோ தங்கத்தை பரிசளித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலம் சரியில்லாததால் ‘என்.ஜி.கே’ ஷூட்டிங் தாமதமானது.
இதன் காரணமாக தீபாவளி ரிலீசில் இருந்து விலகிய ‘என்.ஜி.கே’, படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று படம் முடிந்ததாகப் படத்தின் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருந்தார்.
இதை கொண்டாடும் விதமாக நடிகர் சூரிய அப்படத்தில் பெரிய டெக்னீஷியன்கள் முதல் டிரைவர், கிளாப் அடிப்பவர் வரை அனைவருக்கும் ஒரு நபர் கூடவிடாமல் 8 கிராம் (ஒரு சவரன்) தங்கக் காசுகளை சூர்யா பரிசளித்துள்ளார். சுமார் 130 பேர் 1040 கிராம் (1.04 கிலோ) தங்க நாணயங்கள் பரிசாகப் பெற்றுள்ளனர்.
படப்படிப்பின் கடைசி நாளில் சூர்யா அளித்த இந்த எதிர்பாராத பரிசு படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைவடைய வைத்துள்ளது.