என் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு!

 

என் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு!

 தன்னைப் பற்றி சுயசரிதம் எழுதப்போவதாகவும், விரைவில் வெளிவரும் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

சென்னை: தன்னைப் பற்றி சுயசரிதம் எழுதப்போவதாகவும், விரைவில் வெளிவரும் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

இளையராஜாவின் 75வது பிறந்தநாள்

ilaiyaraja

சென்னை கல்லூரிகளில் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில்,  சென்னை ஐஐடியில், இளையராஜாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

மாணவர்கள் மத்தியில் இளையராஜா

ttn

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, ‘நல்ல விஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால்  அனைத்து கல்வி நிறுவனங்களையும்,  இசையை பாடமாக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது அதை என்னால் தொட முடிந்தது’ என்றார். 

சுயசரிதம் விரைவில் வெளிவரும்

ttn

அப்போது மாணவர்களின் கேள்விக்குப் பதிலளித்த இளையராஜா, தன்னைப் பற்றி சுயசரிதம் எழுதப்போவதாகவும், விரைவில் வெளிவரும் என்று அறிவித்தார். 

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தான் இசையமைத்த பாடல்களை இளையராஜா பாடினார். இதனால் உற்சாகமடைந்த மாணவர்கள் ஆரவாரம் செய்து அவரை திக்குமுக்காட வைத்தனர். 

முன்னதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75வது பிறந்தநாளைக் கொண்டாடியது சர்ச்சைக்குள்ளானது. 

 

மேலும் படிக்க: ரஜினியின் எளிமை புகைப்படத்திற்கு பின்னிருக்கும் மர்மம்