என் சினிமா வாழ்க்கை சீரழிய சத்யராஜ் தான் காரணம்? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த விசித்திரா
தமிழ் சினிமாவில் 90’ஸ் கால கட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை விசித்திரா. ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் 90’ஸ் கால கட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை விசித்திரா. ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் நடித்த இவர் திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு, மூன்று குழந்தைக்கு தாயனார்.
இவர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி சமூகவலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் இணைந்திருக்கும் அவர் தனது புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.
#Sathyaraj sir always believed in my performance.He had given a good character in his first directorial venture@villadi villain movie.stereo type tamil cinema at that time stopped me from doing good roles.@Sibi_Sathyaraj. https://t.co/uLz3orDWUa
— Vichitra (@Vichitr64059385) May 11, 2019
இந்த நிலையில் ரசிகர் ஒருவர், ‘தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு’ என்று பதிவிட்டார். அதற்கு பதிலளித்துள்ள விசித்ரா, ‘எனது திறமையின் மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இயக்குநராக அவதாரமெடுத்த அவர் எனது முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தைக் கொடுத்திருந்தார். ஆனால் அந்த வேளையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரே மாதிரியான படங்களின் போக்கு என்னை சில நல்ல பாத்திரங்களை ஏற்கவிடாமல் தடுத்து விட்டது’ என்று கூறியுள்ளார்.