என் அம்மா ஐஸ்வர்யா ராய்; என் அப்பா வடிவேலுரெட்டி ; மீண்டும் சர்ச்சையை கிளப்பும் இளைஞர்!

 

என் அம்மா ஐஸ்வர்யா ராய்; என் அப்பா வடிவேலுரெட்டி ; மீண்டும் சர்ச்சையை கிளப்பும் இளைஞர்!

ஆனால்  சங்கீத்குமாரிடம் ஐஸ்வர்யாராய் தான் தனது தாய் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

கடந்த ஆண்டு மங்களூரை  சேர்ந்த சங்கீத்குமார் என்பவர் தனது அம்மா ஐஸ்வர்யா ராய் தான். அவர் லண்டனில் 1988 ஆம் ஆண்டு  செயற்கை கருத்தரிப்பு மூலம் என்னை பெற்றெடுத்தார் அப்போது அவருக்கு வயது 15,  இதையடுத்து 2007 ஆம் ஆண்டுஅவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு மும்பையில் இருக்கிறார்.

ttn

எனக்கு என் அம்மாவுடன் வசிக்க வேண்டும், அவருடன் இருக்க வேண்டும்,  நான் என் அம்மாவை மிஸ் பண்ணுகிறேன் என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். ஆனால்  சங்கீத்குமாரிடம் ஐஸ்வர்யாராய் தான் தனது தாய் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

ttn

இந்நிலையில் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த  சங்கீத்குமார், ‘என்னை இரண்டு வயது வரை எனது பாட்டி பிருந்தா மற்றும் தாத்தா கிருஷ்ணராஜ் இருவரும்தான் வளர்த்தார்கள். அதன்பிறகு எனது அப்பா  வடிவேலுரெட்டி விசாகப்பட்டினத்திற்கு  என்னை அழைத்துச் சென்று விட்டார். அதன்பிறகு நான் அங்கு தான் வளர்ந்தேன்.என் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை எனது உறவினர்கள் அழித்துவிட்டனர். எனது தாய் ஐஸ்வர்யா ராய் தான்,  நான் அவருடன் தான் இருப்பேன்  என்று கூறி மீண்டும் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.