“என்று தணியும் இந்த ஆசிட் தாகம்” –பெங்களூரில் பெண் கண்டக்டர் மீது ஆசிட் வீச்சு -பைக்கில் வந்தவர்களின் படு பாதக செயல்… 

 

“என்று தணியும் இந்த ஆசிட் தாகம்” –பெங்களூரில் பெண் கண்டக்டர் மீது ஆசிட் வீச்சு -பைக்கில் வந்தவர்களின் படு பாதக செயல்… 

பெங்களூரு மெட்ரோ டிரான்ஸ்போர்ட் கார்பொரேஷனில் பெண் கண்டக்டராக பணிபுரியும் 35 வயதான  இந்திரா பாய் முகத்தில் வியாழன் அதிகாலை பைக்கில் வந்த சிலர் ஆசிட் வீசிவிட்டு சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது .

lady

பெங்களூர் BMTC பேருந்தில் கண்டக்டராக பணிபுரியும் இந்திராபாய் வியாழக்கிழமை பீன்யா பகுதியில் அதிகாலை தனது  வீட்டிலிருந்து ,  அவர் முகத்திலும் ,கழுத்து மற்றும் முதுகிலும்  ஆசிட் வீசிவிட்டு சென்றனர் ,அங்கேயே அப்பெண் துடித்து கொண்டிருந்து, அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை ஹசரஹட்டா மருத்துவமனையில் சேர்த்து அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் .அப்பெண்ணுக்கு பாலாஜி என்ற கணவரும் ,குசந்தைகளும் உள்ளனர் ,BMTC யில் அப்பெண் 18 ஆண்டுகளாக பனி புரிகிறார் ,

attack

6 மாதத்திற்கு முன்பும்  அப்பெண் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது ,CCTV கேமரா வை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் ,இது அவரின் சொந்த காரணங்களுக்காக நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள் .