என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்றி!- மோடி

 

என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்றி!- மோடி

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

கூட்டத்தில் இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பேசிய நரேந்திர மோடி, “ அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம்.  புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான எங்களின் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது.  2019இல் இந்திய மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.  புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம், மாற்றுவோம். யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வரலாற்று வெற்றியை கொடுத்துள்ளனர்” எனக்கூறினார்.