என்னது முதலமைச்சர் ஓபிஎஸ், துணை முதலமைச்சர் ஈபிஎஸ் ஆஆஆ? போஸ்டர் அடித்து விளக்கிய அதிமுகவினர்!!

 

என்னது முதலமைச்சர் ஓபிஎஸ், துணை முதலமைச்சர் ஈபிஎஸ் ஆஆஆ? போஸ்டர் அடித்து விளக்கிய அதிமுகவினர்!!

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே தேனியில் உள்ள கோவில் ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் பெயர் எம்.பி என பொறிக்கப்பட்ட கல்வெட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மற்றொரு போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே தேனியில் உள்ள கோவில் ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் பெயர் எம்.பி என பொறிக்கப்பட்ட கல்வெட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மற்றொரு போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக சார்பில், உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாக நேற்று நிர்வாகிகள் கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் நடைபெற்றது. இதற்காக அங்கு பேனர் வைக்கப்பட்டிருந்தது.  இதில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவும் கலந்துகொண்டார். அணமையில் இவர் செய்தியாளர்களிடம் பேசிய ஒற்றை தலைமை விவகாரம் ஆறுவதற்குள் மற்றொரு பிரச்னை தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. நிர்வாகிகள் பங்குபெறும் கூட்டத்திற்காக அங்கு ஒரு போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.  அதில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.  இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.