என்னது அப்படி ஒரு நிறுவனமே இல்லையா? 18 லட்சம் ஏமாந்த நபர் நடிகை ஷில்பா ஷெட்டி மீது புகார்!

 

என்னது அப்படி ஒரு நிறுவனமே இல்லையா? 18 லட்சம் ஏமாந்த நபர்  நடிகை ஷில்பா ஷெட்டி  மீது புகார்!

தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான, இக்பால் மிர்சியுடன் தொழில்ரீதியான நட்பு வைத்திருந்ததாகப் புகார் எழுந்தது. 

பாஜிகர்  திரைப்படத்தில் அறிமுகமாகி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் நடித்து கொடிக்கட்டிபறப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது  கணவர் ராஜ்குந்த்ரா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான, இக்பால் மிர்சியுடன் தொழில்ரீதியான நட்பு வைத்திருந்ததாகப் புகார் எழுந்தது. 

 

இந்நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ்குந்த்ரா மீது மேலும் புகார் எழுந்துள்ளது. அதாவது வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சச்சின் ஜோஷி என்பவர்,  சத்யுக் என்ற தனியார் நிறுவனத்தில் கடந்த 2014 மார்ச்சில் தங்க சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார். இதில் 18 லட்சம் வரை செலுத்திய அவருக்கு தள்ளுபடி விலையில் 5 ஆண்டுகள்  கழித்து தங்கம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.

 

 

ஆனால்  தற்போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பதை அறிந்த  சச்சின் ஜோஷி, அதன் இயக்குநர்களாக  இருந்த ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புகாரை ராஜ்குந்த்ரா மறுத்துள்ளார்.