என்னடா தல இது? இப்படியா முடி வெட்டுவ…தாய் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவன்!

 

என்னடா தல இது? இப்படியா முடி வெட்டுவ…தாய் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவன்!

உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த கைகான் குப்பம், வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் மோகனா. இவரது மகன் ஸ்ரீனிவாசன் குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கிறார். அதனால் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்றுவந்துள்ளார். மோகனா சினிமா படப்பிடிப்புகளில் பாத்திரம் கழுவும் வேலை செய்து மகனை காப்பாற்றி வந்துள்ளார்.

ttn

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்த ஸ்ரீனிவாசன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வேலை  முடிந்து வீட்டுக்கு வந்த மோகனா மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வளசரவாக்கம் போலீசார், ஸ்ரீனிவாசன்   உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த சீனிவாசன்,  சலூனுக்கு சென்று முடிவெட்டியுள்ளார். பள்ளியில் படிப்பதால் அதற்கு ஏற்ற மாதிரி முடியை வெட்டாமல் ஸ்டைலாக வெட்டிக்கொண்டு வந்துள்ளார். இதை பார்த்து கோபமான தாய் மோகனா,  “இப்படியா முடி வெட்டுவது? சரியாக வெட்டக்கூடாதா?, படிக்கிற வயதில்  இது என்ன ஸ்டைல் என்று திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீனிவாசன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.