என்ஜினீயரிங் படித்து விட்டு பேஸ்புக்கில் செய்த அட்டூழியம்.. இளைஞரின் நடவடிக்கையால் அதிர்ந்த குடும்பம்!

 

என்ஜினீயரிங் படித்து விட்டு பேஸ்புக்கில் செய்த அட்டூழியம்.. இளைஞரின் நடவடிக்கையால் அதிர்ந்த குடும்பம்!

அதிலேயே மூழ்கிப் போன சீனு, ஒரு கட்டத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த சிறார் ஆபாச வீடியோக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.

தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியில் வசித்து வரும் சோழராஜன் என்பவரின் மகன் சீனு (26). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. அதிலேயே மூழ்கிப் போன சீனு, ஒரு கட்டத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த சிறார் ஆபாச வீடியோக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார். சிறார் ஆபாசப் படங்களைப் பதிவேற்றும் நபர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்து வரும் நிலையில், சீனுவும் போலீசார் விரித்த வலையில் சிக்கியுள்ளார். 
 

ttn

இதனையடுத்து சீனு மீது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த தகவலை தர்மபுரி கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனடிப்படையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், சீனுவின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த வீடியோக்களை வைத்து சீனுவை நேற்று கைது செய்துள்ளனர். சீனு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததை அறிந்த சீனு குடும்பத்தினர், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.