என்ஜினியர் போல் நடித்து பாலியல் பலாத்காரம் ! பலமுறை சீரழித்தது அம்பலம் !

 

என்ஜினியர் போல் நடித்து பாலியல் பலாத்காரம் ! பலமுறை சீரழித்தது அம்பலம் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் வறுமையில் இருந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்தி பலமுறை பலாத்காரம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வறுமையில் இருந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்தி பலமுறை பலாத்காரம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்  கணவரை இழந்த நிலையில் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மகள், மகனை தன்னுடைய தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து வருகிறார்.

பாட்டியின் அரவணைப்பில் இருந்த மாணவி கன்னியாகுமரியில் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருகிறார்.

மாணவி பாலிடெக்னி செல்லும்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் நாள்தோறும் விதவிதமாக ஒரு பைக்கில் வந்து பேச முயற்சித்துள்ளார். ஆரம்பத்தில் பேச மறுத்த மாணவி அந்தந்த வயதில் வரும் ஈர்ப்பு காரணமாக அந்த இளைஞனிடம் பேச ஆரம்பித்துள்ளார். பின்னர் மாணவியிடம் நெருங்கி பேசிய இளைஞர் அவர் குடும்பம் கஷ்டப்படுவதையும் அவரது அம்மா வெளிநாட்டில் இருப்பதையும், தந்தை இல்லாமல் இருப்பதையும் தெரிந்துகொண்டார். அந்த மாணவியிடம் தன்னை ஒரு என்ஜினியர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் மாணவியை தன்னுடைய காதல் வலையில் வீழ வைத்துள்ளார்.

kumari acquisite

இந்நிலையில் திடீரென ஒருநாள் மாணவி காணாமல் போன நிலையில் இதுகுறித்து மாணவியின் பாட்டி போலீசில் புகார் தந்தார். பின்னர் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியுடன் அந்த மாணவி, அந்த இளைஞருடன் மாயமானது தெரியவந்துள்ளது. பின்னர் நாகர்கோவில் அருகே தங்கியிருந்த சிறுமியை மீட்ட போலீசார், மாணவியை கடத்தியதாக கூறி சுஜின் என்பவரை கைது செய்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுஜின் என்ஜினியர் அல்ல என்பதும், அவர் கொத்தனார் வேலை பார்த்து வருவதும் தெரிந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். தந்தையை இழந்த மாணவி தாயின் அரவணைப்பும் இல்லாமல் கயவனை நம்பி தன்னுடைய வாழ்க்கையையும் இழந்துள்ளார்.