எனது பிள்ளை வீடு திரும்புவானா? பேரறிவாளன் தாய் உருக்கம்!
காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி தனது மகன் விடுதலை ஆவானா? என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் இன்று நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாகக் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதேபோல் டெல்லியில் ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதிக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். அதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.அவர் 150வது பிறந்தநாளில் மாநிலஅரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா?#MahathmaGandhi150_Release7Tamils
— Arputham Ammal (@AmmalArputham) October 2, 2019
இந்நிலையில் மகாத்மாவின் பிறந்தநாளைக் குறிப்பிட்டு பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர் 150வது பிறந்தநாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா?’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசு அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது குறிப்பிடத்தக்கது.