எனக்கு யாரும் கொலை மிரட்டல் விடவில்லை: நடிகர் யாஷ் விளக்கம்

 

எனக்கு யாரும் கொலை மிரட்டல் விடவில்லை: நடிகர் யாஷ் விளக்கம்

நடிகர் யாஷ் தனக்கு யாரும் கொலை மிரட்டல் விடவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சென்னை: நடிகர் யாஷ் தனக்கு யாரும் கொலை மிரட்டல் விடவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கன்னடம், தமிழ், உள்பட ஐந்து மொழிகளில் வெளியான படம் கே.ஜி.எஃப் .கோலார் தங்க சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து இருந்தார். மேலும் கன்னட சினிமாவிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற பெயரை பெற்றது.

இந்நிலையில், மார்ச் 7-ம் தேதியன்று கர்நாடக காவல் துறையினரால், பாரத் என்னும் ஒரு ரவுடி உள்பட நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் விசாரணையின் போது பாரத், தனது கேங் கூடிய விரைவில் ஒரு கன்னட நடிகரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். 

yash

இதையடுத்து கூலிப்படை பரத், நடிகர் யாஷை கொலை செய்ய திட்டம் வைத்திருப்பதாக பல்வேறு தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த யாஷ் கூறியதாவது, ‘எனக்கு இதுவரை எந்தக் கொலை மிரட்டலும் வரவில்லை. நான் பாதுகாப்பாக உள்ளேன்.திரையுலகில் யாரும் எனக்கு எதிரி கிடையாது. இங்கே இருப்பது ஆரோக்கியமான போட்டி. என்னைக் கொலை செய்யும் அளவுக்குக் கீழ்த்தரமாக யாரும் நடந்துகொள்ளப்போவதில்லை. அதனால், என் ரசிகர்கள் பிற நடிகர்களைக் குறைசொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்றும் பேசியுள்ளார்.