‘எனக்கு கல்யாணம் செஞ்சு வையுங்க’.. முதல் திருமணத்தை மறைத்து மற்றொரு திருமணம் : கையும் களவுமாகச் சிக்கிய இளைஞர் கைது !

 

‘எனக்கு கல்யாணம் செஞ்சு வையுங்க’.. முதல் திருமணத்தை மறைத்து மற்றொரு திருமணம் : கையும் களவுமாகச் சிக்கிய இளைஞர் கைது !

இவர் அவரது சொந்த ஊரிலிருந்து சென்று ஈரோடு மாவட்டத்தில்  வீரச்சிபாளையத்தில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள சேந்தன் குடி கிராமத்தில் வசித்து வருபவர்  சிவனேசன். இவர் அவரது சொந்த ஊரிலிருந்து சென்று ஈரோடு மாவட்டத்தில்  வீரச்சிபாளையத்தில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

ttn

இவர் அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்த தங்கமணி என்ற பெண்ணின் மீது காதல் கொண்டு வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தனது சொந்த ஊருக்குச் சென்ற இவர் தனக்குத் திருமணம் செய்து பெற்றோரிடம் வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்குச் சம்மதித்த பெற்றோர் பிருந்தாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். 

ttn

இவர் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் தான் பணிபுரியும் இடத்திற்குச் சென்று வருவதாகவும், சென்று வந்த பிறகு உன்னையும் அங்கு அழைத்துச் செல்வதாக பிருந்தா  தேவியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், வெகு நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராததால் குழம்பி போன பிருந்தாதேவி அவருக்கு போன் செய்து விசாரித்துள்ளார். அப்போது,  அவர் தான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதாகவும்  ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ttn

இதனால் சந்தேகம் அடைந்த பிருந்தா, அவர் வேலைக்காகச் சென்ற இடத்திற்கே நேரில் சென்று விசாரணை செய்துள்ளார். அப்போது சிவனேசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும் 5 வயதில் பெண் குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பிருந்தா சிவனேசன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், முதல் திருமணத்தை மறைத்து மற்றொரு திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.