‘எனக்கு இட்லி, தோசை, வடை ரொம்ப பிடிக்கும்’ : சென்னையில் மோடியின் அசத்தல் பேச்சு!

 

‘எனக்கு இட்லி, தோசை, வடை ரொம்ப பிடிக்கும்’ : சென்னையில் மோடியின் அசத்தல் பேச்சு!

ன் இதை நாடாளுமன்றத்தில் பொருத்தலாம்  என்று சபாநாயகரிடம் கூறியுள்ளேன்

சென்னை: சென்னையில் எனக்கு  இட்லி, தோசை, வடை, சாம்பார் ரொம்ப பிடிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

modi

பிரதமர் மோடி சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். அதனால் விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா  மற்றும் அதிமுக அமைச்சர்கள் என பலர் நேரில் வருகை புரிந்து மோடியை வரவேற்றனர். 

modi

பின்னர் சென்னை ஐஐடி சென்ற பிரதமர் மோடி, இந்திய- சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்குப் பரிசுகளை வழங்கினார்.  பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாடிய அவர்,  தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது. எனக்கு இட்லி, தோசை, வடை, சாம்பார் ரொம்ப பிடிக்கும்’ என்றார். மேலும் தொடர்ந்து பேசியா அவர், ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது. ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வி அமைச்சருக்கு நன்றி. இந்த ஹேக்கத்தான் மூலம், ஒரு புதிய கேமிராவை, கண்டுபிடித்துள்ளனர். இதனால் யார் யார் கூட்டத்தில் பேசுவதைக்  கவனிக்கிறார்கள் என்பதை காணலாம். நான் இதை நாடாளுமன்றத்தில் பொருத்தலாம்  என்று சபாநாயகரிடம் கூறியுள்ளேன் என்று நகைச்சுவையாகப் பேச, அரங்கமே சிரிப்பலையில் திளைத்தது.