எந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

 

எந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

அம்மாவையும், அப்பாவையும் அன்போடு வழிபட்ட பிள்ளை ஆதலால் பிள்ளையார். வணக்கத்திற்குரிய முதல் கடவுளாக விநாயகர் இருந்தாலும், ரொம்பவே எளிமையானவர். அதனால் தான் சுண்டலும், அருகம்புல்லும் வெச்சு வழிபட்டாலே வரங்களை அள்ளித் தருபவராக இருக்கிறார். 

அம்மாவையும், அப்பாவையும் அன்போடு வழிபட்ட பிள்ளை ஆதலால் பிள்ளையார். வணக்கத்திற்குரிய முதல் கடவுளாக விநாயகர் இருந்தாலும், ரொம்பவே எளிமையானவர். அதனால் தான் சுண்டலும், அருகம்புல்லும் வெச்சு வழிபட்டாலே வரங்களை அள்ளித் தருபவராக இருக்கிறார். 

எல்லா கடவுள்களிலும் முதன்மையானவர் . இவர் எளிமையானவர். அதனால் தான் எளிதாக கிடைக்கும் அருகம்புல்லை வைத்து வழிபட்டாலே அனைத்து வரங்களையும் அள்ளித் தருபவர். விநாயகரை எந்த ரூபத்திலும் எந்த பொருளிலும்  வழிபடலாம். மனசு மட்டும் தான் வேணும். மண், கல், மஞ்சள், வெல்லம், உப்பு.. இவ்வளவு ஏன் பசுவின் சாணத்திலும் கூட விநாயகரைச் செய்து வழிபடலாம். நீங்க மனசுல விநாயகரை நினைச்சு எந்த பொருளைப் பிடிச்சு வெச்சாலும் அது பிள்ளையார் தான். 

அப்படி எந்தெந்த பிள்ளையாரை வழிபட்டால் நமக்கு என்ன மாதிரியான பலன்களைத் தருவார் என்று பார்க்கலாம்.

1மண்ணினால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால்  ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
2.கரும்கல்லினால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் எடுத்த காரியங்கள் யாவிலும் வெற்றி கிட்டும்.
3.உப்பினால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் பகைவர்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
4. வெல்லத்தினால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் உடம்பில் உள்ள கொப்புளங்கள் மறையும்.
5. குங்குமத்தால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
6.விபூதியால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் வெப்பத்தால் வருகிற நோய்கள் நீங்கும்.
7.மஞ்சளால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். 
8.பசுஞ்சாணத்தால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கி விரைவில் சுபநிகழ்ச்சிகள் வீட்டில் அரங்கேறும்.
9,வெள்ளெருக்கில் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் பில்லி சூன்யம் அகலும்.
10,வாழைப்பழத்தால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கும். 
11. சந்தனத்தால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் நன்மக்கட்பேறு உண்டாகும்.
12. சர்க்கரையால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் வீட்டில் இனிமையான தருணங்கள் மேலோங்கும்.

நம் விருப்பத்திற்கேற்ப பிள்ளையாரை, விரும்பிய பொருளில், நாம் விரும்பிய வடிவத்தில் வைத்து வழிபட வேண்டியது தான். ஆனந்த வாழ்வுக்கு ஆனை முகத்தானை வழிபடுங்கள்!