எந்த சலசலப்புக்கும் ரஜினி அஞ்சமாட்டார் – ஹெச்.ராஜா

 

எந்த சலசலப்புக்கும் ரஜினி அஞ்சமாட்டார் – ஹெச்.ராஜா

ரஜினி துக்ளக் விழாவில் மேற்கோள் காட்டியது ஒரு சின்னப் பகுதி மட்டுமே. திராவிட கட்சியினர் தொடர்ந்து பொய்களை பரப்பக்கூடியவர்கள். ரஜினி பேசியதற்கு அவரை மிரட்ட நினைக்கிறார்கள் ஆனால்  எந்த சலசலப்புக்கும் அவர் அஞ்சமாட்டார்

ரஜினி துக்ளக் விழாவில் மேற்கோள் காட்டியது ஒரு சின்னப் பகுதி மட்டுமே. திராவிட கட்சியினர் தொடர்ந்து பொய்களை பரப்பக்கூடியவர்கள். ரஜினி பேசியதற்கு அவரை மிரட்ட நினைக்கிறார்கள் ஆனால்  எந்த சலசலப்புக்கும் அவர் அஞ்சமாட்டார்.

Hraja

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹெச். ராஜா, “கையில் முரசொலி வைத்திருந்தால் அவர் திமுக காரர் என்று கூறியதற்கு ஏன் இவ்வளவு கூக்குரல். திமுககாரர் என்பது என்ன அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா?  ஈ.வெ.ரா தொடர்ந்து இந்து கடவுள் விக்கிரகங்களை உடைப்பது. இந்து கடவுள்கள் பற்றி இழிவாக பேசுவது போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தவர் தான். ஆகவே நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆமா இவர் தனது சரக்கு மிடுக்கு பேச்சுக்கு ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை” என பதிவிட்டுள்ளார்.