எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

 

எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

புதுதில்லி: எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. அதனடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட்  மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில், நாளை நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.