எடப்பாடியை தொடர்ந்து டாக்டரானார் சிவகார்த்திகேயன்!
‘ஹீரோ’ படம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘ஹீரோ’ படம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சனுடன் இணைந்து ’டாக்டர்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கேஜேர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மருத்துவராக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், டிசம்பர் 6 ஆம் முதல் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Very happy to share that my next film will be with my dearmost friends @Nelson_director & @anirudhofficial titled as #DOCTOR ?⚕?? Once again happy to be associated with @kjr_studios ? Shoot starts soon? @SKProdOffl pic.twitter.com/W82ltJrbHK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 2, 2019
ரெமோ படத்தில் நர்ஸாக வலம்வந்த சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது அவர் அவதரித்துள்ள டாக்டர் வேடமும் பேசும்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.