எடப்பாடியும், கமலும் விரட்டியடித்தவருடன் கைகோர்க்கும் மு.க.ஸ்டாலின்… OMG..என்னவாகப்போகுதோ..!?

 

எடப்பாடியும், கமலும் விரட்டியடித்தவருடன் கைகோர்க்கும் மு.க.ஸ்டாலின்… OMG..என்னவாகப்போகுதோ..!?

பிரஷாந்த் கிஷோர் முழுமையாக திமுக பிரச்சார வியூகராக மாறி விட்டார். இதனால் சுனிலை வளைக்க மாற்றுக் கட்சிகள் முழுமூச்சாக முயன்று வருகின்றனர்.

அதிமுக, மக்கள் நீதி மய்யம் என மாறி மாறி தேர்தல் வியூகத்திற்காக பிரஷாந்த் கிஷோரை சுற்றி வந்த நிலையில், தமிழகத்தில் அவரது செயல்பாடுகளும், கணிப்புகளும் ஒத்து வராது என உணர்ந்து கொண்ட இரு கட்சிகளும், கிஷோரை கிடப்பில் போட்டு விட்டனர். 

அடுத்து ஆட்களை பிடிக்க அலைந்த பிரசாந்த் கிஷோர், தமிழகத்தில் ஆட்சி அமைத்தே தீர வேண்டும் என்கிற வேட்கையுடன் அலையும் திமுகவை குறி வைத்து வளைத்து விட்டார். இதனால்தான் இதுவரை திமுகவுக்காக வேலை, வியூகம் அமைத்து வந்த ஓ.எம்.ஜிக்கும், திமுகவுக்கும் இடையே லடாய் ஆரம்பித்து சுனில் வெளியேறி விட்டார்.

 stalin

கடந்த 2014  நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க முயன்ற மோடி, முதலில் செய்த வேலை, தங்களுக்கென ஒரு அரசியல் கன்சல்டன்ஸி நிறுவனத்தை புக் செய்ததுதான். அது பிரசாந்த் கிஷோரின் நிறுவனம். மோடியின் கணக்கு பலித்து, அவர் ஆட்சியை பிடித்தார். அதற்கு அந்த நிறுவனத்தின் சர்வேக்களும், ரகசிய பிரசாரங்களும் பெரிதும் உதவின. 

இதைப் பார்த்த ஸ்டாலின், கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலில் ஓ.எம்.ஜி. எனும் அரசியல் கன்சல்டன்ஸி நிறுவனத்தை தங்களுக்காக பணியில் அமர்த்தினார். அவர்கள் போட்டுக் கொடுத்த திட்டம்தான், ஸ்டாலின் டீ ஷர்ட் மற்றும் ஷூவெல்லாம் போட்டுக் கொண்டு நடந்த ‘நமக்கு நாமே’ பயணம். ஓ.எம்.ஜி.யின் வழிகாட்டுதலின் படி மட்டுமே அந்த தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின். ஆட்சியை பிடிக்காவிட்டாலும் கூட முரட்டுத் தனமான பலமுடையை எதிர்க்கட்சியாக சட்டபையில் அமர்ந்தனர்.

இந்த ஓ.எம்.ஜி. டீமின் நிர்வாகி சுனிலும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நகமும் சதையுமாக இருந்து கட்சிக்கான ஸ்கெட்ச்களைப் போட்டனர். அதை அப்படியே ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருந்தார். சுனிலின் வழிகாட்டுதல் படியே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது மட்டுமில்லாமல், ராமதாஸ் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தபோது ‘வெட்கமில்லையா?’ என ஸ்டாலினை வைத்து கேட்க வைத்தார். இந்த அதிரடிகளும், ஸ்கெட்ச்களும் இணைந்து அந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. இதனால் சுனிலை ஸ்டாலின் கொண்டாடினார்.prashanth kishor

அடுத்து வந்த வேலூர் லோக்சபா தேர்தலையும் சுனிலின் ஸ்கெட்ச் படியே தி.மு.க. சந்தித்தது. ஆனால், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே ஜெயித்தனர். ’செல்வாக்கு சரிவுக்கு என்ன காரணம்?’ என்று ஸ்டாலின் கேட்டபோது, ‘வேட்பாளர் தேர்வு தப்பு. துரைமுருகன் மகனுக்கு பதிலாக வேறு நபர் நின்றிருந்தால் பெரியளவிலான வித்தியாசத்தில்தான் ஜெயித்திருப்போம். துரைமுருகனும், அவர் மகன் கதிர் ஆனந்தும் தொகுதியில் பெரியளவில் நல்ல பெயரை சம்பாதிக்கவில்லை.’ என்று ஓ.எம்.ஜி. டீம் கருத்து சொல்லியது. இதனால் சுனில் மீது துரைமுருகனுக்கு கடும் கோபம். ஓ.எம்.ஜி. டீமின் சுனில் மீது ஏக அதிருப்தியானார் துரைமுருகன்.

இதேபோல் எதிர்வரும் சட்டசபை தேர்தலை மையமாக வைத்து தி.மு.க.வின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் சில காய்நகர்த்தல்களை செய்ய துவங்கினர். இவற்றை ரகசியமாக ஸ்மெல் செய்து ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்தார் சுனில். இதனால் தமிழக முழுக்க பல நிர்வாகிகளின் கோபத்துக்கு ஆளானார் சுனில். அடுத்து நடந்ததுதான் கிளைமேக்ஸ். அதாவது உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வந்த ஸ்டாலின், அவருக்கு இளைஞரணியின் தலைமை பதவியை கொடுக்க முடிவெடுத்தார். ஆனால் சுனில் அதை தடுத்து, ‘கட்சிக்குள் கொண்டு வந்தது சரி. நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்கு அனுப்பியதும் சரி. ஆனால், பதவி எதுவும் இப்போது தர வேண்டாம். அது நெகடீவ் அலையை உருவாக்கும்!’ என்றார். udhayanidhi

ஸ்டாலினும் ‘இது சரிதானோ?’ என யோசித்தார். இந்த விஷயம் ஸ்டாலினின் குடும்பத்தினரின் காதுகளுக்குப் போனது. ‘உதயநிதி கட்சிக்குள் வந்து, பதவியில் அமர வேண்டும். அவரது ஜாதகம்தான் அவரது அப்பாவை உயர்த்திவிடும்’ என்று ஜோஸியர் ஒருவர் சொல்லியிருந்ததை தொடர்ந்து, உதய்க்கு இளைஞரணியில் பட்டாபிஷேகம் நடத்த துடித்துக் கொண்டிருந்த குடும்பமோ, சுனில் வார்த்தைகளை கேட்டு கொதித்துப் போனது. ஸ்டாலினுக்கு முழு நெருக்கடி கொடுத்து, உதயை பதவியிலமர்த்த வைத்தனர். 

ஸ்டாலினின் குடும்பத்தினரின் கோப பார்வையில் சுனில் விழுந்ததை அறிந்த கழக நிர்வாகிகள், ஓ.எம்.ஜி. டீம் மற்றும் சுனில் பற்றி பல புகார்களை தலைமைக்கு தட்டிவிட்டனர். விளைவு, சுனிலுக்கு கட்சிக்குள் நெருக்கடி எழுந்தது. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் திமுகவினரை நாட, கச்சிதமாக பழம் நழுவி பாலில் விழுந்தது. பிரசாந்த் கிஷோரும், சுனிலும் ஆரம்ப காலத்தில் ஒரே டீமில் இருந்தவர்கள் என்பதால், பிரஷாந்த் கிஷோருடன் வேலை பார்ப்பதில் ஈகோ பார்த்த சுனில் வெளியேறி விட்டார். 

இப்போது பிரஷாந்த் கிஷோர் முழுமையாக திமுக பிரச்சார வியூகராக மாறி விட்டார்.  இதனால் சுனிலை வளைக்க மாற்றுக் கட்சிகள் முழுமூச்சாக முயன்று வருகின்றனர். ஆனால், சுனில் ரஜினி கட்சிக்காக அழைக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்.