எடப்பாடியாரின் நண்பருடன் சேர்ந்து கொண்டு செல்லூர் ராஜூ அத்துமீறல்..!

 

எடப்பாடியாரின் நண்பருடன் சேர்ந்து கொண்டு செல்லூர் ராஜூ அத்துமீறல்..!

முதல்வரின் கோபத்தை தணிக்க தான் இந்த ஏற்பாடாம். அதே சமயம், இப்படி அரசியல்வாதிகள் வருவதால் அதிகாரிகள், ‘அப்செட்’ ஆகிறார்கள்.

அதிகாரிகள் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடியாரின் நண்பரை செல்லூர் ராஜூ அழைத்துக் கொண்டு போனது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கூட்டுறவு துறை செயல்பாடு சம்பந்தமாக அனைத்து மாவட்ட இணை பதிவாளர்களுடன் கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, துறையின் செயலர், பதிவாளர் ஆகியோர், இரண்டு மாசத்துக்கு ஒரு முறை, ஆய்வுக் கூட்டம் நடத்துவார்கள்.

edappadi palanisamy

 சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இருக்கிற கூட்டுறவு அலுவலகத்தில் நடக்கிற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஒருத்தர் மட்டும்தான், அரசியல்வாதியாக இருப்பார். மற்றபடி அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ‘ரேஷன் கடைகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்ததில் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கிறதாம். அதனால், கூட்டுறவு அமைச்சர் ராஜு மீது, முதல்வர் கோபமாக இருப்பதாக சொல்கிறார்கள். 

இதனால், முதல்வரின் நண்பரான, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனை, துறை தொடர்பான ஆய்வுக்கு, செல்லூர் ராஜு அழைத்து செல்கிறார். அவர் மூலமாக முதல்வரின் கோபத்தை தணிக்க தான் இந்த ஏற்பாடாம். அதே சமயம், இப்படி அரசியல்வாதிகள் வருவதால் அதிகாரிகள், ‘அப்செட்’ ஆகிறார்கள்.