எடப்பாடிக்கு ஆதரவு… டி.டி.வி தினகரன் திடீர் அறிவிப்பு!

 

எடப்பாடிக்கு ஆதரவு… டி.டி.வி தினகரன் திடீர் அறிவிப்பு!

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிஏஏ ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையை நிகழ்த்தியதால் ஏற்பட்ட கலவரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானம் வலுத்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரவு தர தயாராக உள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv-dinakaran

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிஏஏ ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையை நிகழ்த்தியதால் ஏற்பட்ட கலவரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானம் வலுத்து வருகிறது.
இது குறித்து டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “அ.தி.மு.க அரசு சி.ஏ.ஏ-வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஆதரிப்பேன். முதலில் எடப்பாடி அரசு சி.ஏ.ஏ-வுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரட்டும். கொண்டுவந்தால் ஆதரிப்பேன். ஆனால் கொண்டுவருவார்களா என்று தெரியாது. வந்த பிறகு பார்ப்போம்” என்றார்.