எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைக்கு சிக்கல் ஏற்படுத்திய டொனால்டு டிரம்ப்

 

எச்-1பி விசா வைத்திருப்பவர்களின்  வாழ்க்கை துணைக்கு சிக்கல் ஏற்படுத்திய டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின்  வாழ்க்கை  துணைகளின்  வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின்  வாழ்க்கை  துணைகளின்  வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாட்டினரை பணியமர்த்த அனுமதிப்பதற்கு எச்-1பி விசா பயன்படுகிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் இதை பயன்படுத்தி, அங்கு பணியாற்றுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் ஆவர். அவர்களின் வாழ்க்கை துணைகளும் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள். 

இந்நிலையில் எச்-1பி விசா தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கருதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், எச்-1பி விசா பெற்றவர்களின் வாழ்க்கை துணைகள் பணியாற்றுவதற்கான அனுமதியை ரத்து செய்ய திட்டமிட்டார்.

இதனை கருத்தில் கொண்டு, வெள்ளை மாளிகை அலுவலகத்தில் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தற்போதைய விதிமுறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை நேற்று சமர்ப்பித்தது. 

இதன் அடிப்படையில், வெள்ளை மாளிகை இறுதி முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.  புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில்  பெரும்பாலான இந்தியர்களுடைய வாழ்க்கை துணைகளின் பணிக்கு ஆபத்து காத்திருப்பது உறுதி என்றே சொல்லலாம்.