எச்.ராஜாவை கைது செய்யக்கோரி மெரினா போராட்டம்! – வேல்முருகன் எச்சரிக்கை

 

எச்.ராஜாவை கைது  செய்யக்கோரி மெரினா போராட்டம்! – வேல்முருகன் எச்சரிக்கை

மாணவர்கள் மீது குண்டுகள் பாயும் என்று பேசிய எச்.ராஜாவை கைது செய்யக்கோரி மெரினாவில் எப்போது வேண்டுமானாலும் கூடி போராட்டம் நடத்துவோம் என்று பண்ருட்டி வேல்முருகன் பேசியிருப்பது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

velmurugan

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் தோழமைக் கட்சிகள் ஆலோசனை கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,மதிமுக து.பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஜவாஹிருல்லா, முத்தரசன், சுபவீரபாண்டியன், வ.கெளதமன் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.

mmk

இந்த நிகழ்ச்சியில் வேல்முருகன் பேசுகையில், “பாஜகவின் தொடர் அழுத்தத்தின் காரணமாக அவர்கள் கொடுத்த கெடு நேரத்திற்குள் நெல்லை கண்ணன் கைது செய்யபட்டது கண்டிக்கதக்கது, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது , எச்.ராஜா பிற கட்சியினரை அவதூறாக பேசுவதை கண்டிக்கிறோம் அவர் மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அவரை கைது

kannan

செய்யவில்லையென்றால் அவர்கள் குறித்த நேரத்தில் கைது செய்ய வேண்டி மெரினாவில் போராடினர் எச் ராஜா வை கைது செய்யவில்லை என்றால் நாங்களும் மெரினாவில் கூடி போராடுவோம், உள்நோக்கமின்றி எதார்த்தமாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்ய சொல்லும் பாஜக , பெயரை குறிப்பிட்டு தாக்கி பேசு எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பெரம்பலூரில் நெல்லை கண்ணனை கைது செய்யும் போது பாஜகவின் குண்டர் படையோடு சென்று கைது செய்துள்ளது காவல்துறை பாஜகவினரை உள்ளே அனுமதிக்காமல் கைது செய்திருக்க வேண்டும்.. எச்.ராஜா வைகோ வை பார்த்து உயிரோடு நடமாடமுடியாது என குறியுள்ளார் மாணவர்களை தாக்கி பேசியிருக்கிறார்.

gurumoorthy

துணை முதல்வர்  ஒ.பி.எஸை நேரிடயாக குருமூர்த்தி பேசியுள்ளார்  இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்… எச்.ராஜா வை கைது செய்யவில்லையென்றல் அவருக்கு எதிராக திடீரென மெரினாவில் போராட்டம் நடத்துவோம் நாள் எதுவும் குறிப்பிடாமல்” என்றார்.

thiruma

வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “நெல்லை கண்ணன் மிகச்சிறந்த பேச்சாளர் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர் அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசியுள்ளார். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் அதை போல் தான் அமித்ஷா சோலியை முடித்து விட்டால் எல்லாம் முடிந்து விடும் என நகைச்சுவையாக கூறினார் அதை அங்குள்ளவர் ஆதரித்தால் கோஷம் எழுப்பிவிடுவார்கள் ஆனால் அனைவரும் சிரித்து விட்டு கலைந்து சென்று விட்டனர்..

raja

 மெரினாவில் யாரும் நான்கு பேருக்குமேல் கூட முடியாது ஆனால் பாஜகவினர் பேரணியே நடத்தியுள்ளனர் காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. பாஜகவினர்க்கு அஞ்சுகிறதா தமிழக அரசு என எண்ணத்தொன்றுகிறது. நெல்லை கண்ணன் அதிகாரமாக பேசவில்லை அவர் அதிகாரத்தை பறித்து விடுங்கள் என்று தான் பேசினார் , இதுவரை பலமுறை எச்.ராஜா நேரிடையாக தாக்கி பேசியுள்ளார் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லையெனில் அவர்களை போலவே மெரினாவில் கூடுவோம் என எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம்” என்றார்.

muthu

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, “தமிழக அரசு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை போல் செயல்படவேண்டும். தமிழக அரசுக்கும் காவல்துறைக்கு உத்தவிடுகிறார்கள் எச்.ராஜா விற்கு இவர்கள் கட்டுபடுகிறார்கள், எச்.ராஜா நீதிமன்றத்தை (மயிருக்கு) சமம் என்று கூறினார் அதை நான் சொல்லவிரும்பவில்லை,

periyar

பெரியாரை செருப்பால் அடிப்பேன் என கூறினார் அனைத்து கட்சிகளும் என்றுக்கொள்ளப்பட்டவர் பெரியார் அவரை அவமதித்தார் இப்படி எச்.ராஜா என்ன வேண்டுமானாலும் பேசலாமா? மாநில அரசு மத்தியில் உள்ளவர்களை திருபித்திப்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜகவினர் எதை செய்தாலும் கண்டுக்கொள்ளாமல் உள்ளது.. நெல்லை கண்ணன் மீது போடப்பட வழக்கினை திரும்பப்பெற வேண்டும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்” என்றார்.