‘எங்கள் சாவுக்கு வறுமை மட்டுமே காரணம்’… மனைவி, மகன் கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை!

 

‘எங்கள் சாவுக்கு வறுமை மட்டுமே காரணம்’… மனைவி, மகன் கொலை  செய்துவிட்டு ஆட்டோ டிரைவர்  தற்கொலை!

கட்டளை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு மனைவி மற்றும் 6 வயது மற்றும் 2 வயதில்  குழந்தைகள் இருந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கட்டளை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு மனைவி மற்றும் 6 வயது மற்றும் 2 வயதில்  குழந்தைகள் இருந்துள்ளனர். ஆட்டோ டிரைவரான  கந்தசாமிக்கு கடன் தொல்லையும் வறுமையும் ஒருசேரக் கழுத்தை நெரித்துள்ளது. 

ttn

இந்நிலையில் இன்று காலை கந்தசாமி  வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது .வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது கந்தசாமி தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது மனைவியோ  இரத்தம் கக்கிய நிலையில் இறந்து கிடந்ததோடு அவரது 6 வயது குழந்தை துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாக  கிடந்துள்ளான். 2 வயது குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ttn

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்தோடு அங்கிருந்த சுவரில்,  எங்கள் சாவிற்கு வறுமை தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது.  

ttn

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், கந்தசாமி மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.