‘எங்களின் அருமை உங்களுக்கு புரியும்’: மகன்களை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம்!
குடும்ப பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: குடும்ப பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயலாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செந்தாமரை. இவருக்கு அபிதா என்ற மனைவியும், லக்ஷ்மி நாராயணன் என்ற ஒரு மகனும் மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். செந்தாமரை அண்ணா நகரில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். செந்தாமரை தனது மனைவி அபிதா நடத்தையில் சந்தேகித்து அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற செந்தாமரை இரவு வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, மனைவி மற்றும் பிள்ளைகள் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயலாநகர் போலீசார், மூன்று சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணையில், வீட்டில் அபிதா எழுதிய கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ‘எனது சாவிற்கு யாரும் காரணமில்லை. என் கணவர் தங்களைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. இறந்த பிறகு தான் எங்களின் அருமை புரியும்’ என்று உருக்கமாக எழுதியுள்ளார். இதன் மூலம் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இரண்டு பிள்ளைகளையும் தூக்கிட்டு கொலை செய்துவிட்டு அபிதாவும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.