எக்ஸாம் கூட எழுத விடாம எக்ஸாம் ஹால்லேயே பொண்ண தூக்கிட்டிங்களே?-பிளஸ் டூ  பெண் கடத்தல் 

 

எக்ஸாம் கூட எழுத விடாம எக்ஸாம் ஹால்லேயே பொண்ண தூக்கிட்டிங்களே?-பிளஸ் டூ  பெண் கடத்தல் 

அந்த டீனேஜ் பெண் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.காதல் பிரச்சினையில் சிக்கி காதலனுடன் போய்விட்டாரா  என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது 

நாக்பூர்: சதர் பகுதியில் புதன்கிழமை மாநில அரசின்  12 ஆம் வகுப்பு தேர்வுக்கு வந்த பின்னர் 17 வயது சிறுமி காணாமல் போயுள்ளார். அந்த டீனேஜ் பெண் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.காதல் பிரச்சினையில் சிக்கி காதலனுடன் போய்விட்டாரா  என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது 

புதன்கிழமை காலை 10.50 மணியளவில் தனது 17 வயது மகளை சதாரில் உள்ள ஒரு பரீட்சை மையத்தில்  12 ஆம் வகுப்பு எக்ஸாம் எழுத  விட்டு விட்டு வந்ததாகவும் ,மதியம் 2 மணியளவில் அவளை அழைத்து வரச் சென்றபோது, அந்தப் பெண் எங்கும் காணப்படவில்லை என்று அந்த பெண்ணின் தந்தை கூறினார் . அவருடைய உறவினர்கள்  எல்லா இடங்களிலும் அந்த பெண்ணை தேடினார்கள், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, காணாமல் போன பெண்ணை பற்றி  சதர் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது.