ஊழல் பற்றி என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? செல்லூர் ராஜூ சவால்

 

ஊழல் பற்றி என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? செல்லூர் ராஜூ சவால்

நெல்லை ரெட்டியார் பட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

நெல்லை ரெட்டியார் பட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பிரச்சாரத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜீ,  “தோல்வி பயத்தால் எங்களது வேட்பாளரை ஸ்டாலின் குற்றம் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார். இவர் ஊழல் செய்து விட்டு இன்று இந்த ஆட்சியில் ஊழல் என்று சொல்கிறார். கலைஞர் என்ன யோக்கியரா? கலைஞர் எப்படி வந்தார். அவருக்கு என்ன சொத்து இருந்தது என்பது மக்களுக்கே தெரியும். அரசியலில் ஊழல் செய்ற கட்சி திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக. ஊழல் பற்றி நான் ஒரே மேடையில்  ஸ்டாலின் உடன் விவாதம் செய்ய தயார்.. அவருக்கு தைரியம் இருக்கிறதா?

Sellur Raju

எங்களை ஊழல் வாதி என்று சொல்ல இவருக்கு  அறுகதை இல்லை. அதிமுகவினர் ஸ்டாலினை கண்டு அஞ்சமாட்டோம். நாங்கள் பனங்காட்டு நரி போன்றவர்கள்,  ஸ்டாலின் அப்பாவையே பார்த்தவர்கள், இவர் எம்மாத்திரம். ஸ்டாலினும், கலைஞரும் அதிமுகவை அழிக்க வேண்டும் என்று எத்தனையோ பொய் வழக்கு போட்டனர். அத்தனையும் மீறி இந்த இயக்கம் வந்திருக்கிறது.  நாம் முதல்வராக வந்து விடலாம் என கனவு கண்டு கொண்டு இருக்கிறார்.. அது கனவோடு தான் இருக்குமே தவிர நினைவு ஆகாது.” என்று தெரிவித்தார்.