ஊரைவிட்டு ஓடிய வாலிபர்: 13 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை; திருப்பூரில் பரபரப்பு!?

 

ஊரைவிட்டு ஓடிய வாலிபர்: 13 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை; திருப்பூரில் பரபரப்பு!?

13 வயது சிறுமிக்கு  ஆண்  குழந்தை குழந்தை பிறந்துள்ள சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர்:  13 வயது சிறுமிக்கு  ஆண்  குழந்தை குழந்தை பிறந்துள்ள சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன்  திருப்பூரில் வசித்து வருகிறார். இவருக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் பனியன் தொழிற்சாலையில் வேலைக்கு செல்வதால் குழந்தையைக் கவனித்துக் கொள்ள தன்னுடைய 13 வயது தங்கையை பீகாரில் இருந்து வரவழைத்துள்ளார். 

harassment

இதையடுத்து அக்கா வீட்டில் தங்கி வந்த சிறுமிக்கும் வீடிஜ் அருகில் வசிக்கும் அஜித் கர்‌ஷல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அஜித் கர்‌ஷல் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அஜித் கர்ஷல் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவர் திருப்பூருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

bbay

இதைத் தொடர்ந்து சிறுமியின் அக்கா சிறுமியின் உடல்நிலை மோசமாவதை அறிந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது அஜித் கர்‌ஷலுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து கூறியுள்ளார். இதனால்  திருப்பூர் வீரபாண்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான இளைஞரைத்  தேடி வந்தனர்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த 13 வயது சிறுமிக்கு நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண்  குழந்தை பிறந்தது. இந்த  சம்பவம் அப்பகுதியில் பரவலாகப் பேசப்பட்டது.