ஊரடங்கையும் மீறி தனது தந்தை அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே சுற்றுவதாக மகன் போலீசில் புகார்!

 

ஊரடங்கையும் மீறி தனது தந்தை அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே சுற்றுவதாக மகன் போலீசில் புகார்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,500ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,500ஐ தாண்டியுள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும்படியும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Police

இந்நிலையில் டெல்லியில் ஊரடங்கையும் மீறி தனது தந்தை அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே சுற்றுவதாக மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். வசந்த் கஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தான் வற்புறுத்தியும் தந்தை சொல்வதை கேட்பதில்லை எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் புகார் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.