ஊரடங்கு உத்தரவு ! வேலையின்றி கடனில் சிக்கிய கூலித்தொழிலாளி ! பசியால் துடித்த மகளை கொலை செய்த பரிதாபம் ! 

 

ஊரடங்கு உத்தரவு ! வேலையின்றி கடனில் சிக்கிய கூலித்தொழிலாளி ! பசியால் துடித்த மகளை கொலை செய்த பரிதாபம் ! 

தெலுங்கானா மாநிலம் சங்கிரெட்டி மாவட்டம் புல்கல் மண்டலத்தில் உள்ளது கொங்கலூர் கிராமம். இங்கு கூலித்தொழிலாளியான ஜீவன் என்பவர் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது கடைசிக் குழந்தையின் பெயர் அவந்திகா வயது 4. 

தெலுங்கானா மாநிலத்தில் கடன் தொல்லைக் காரணமாக ஈவு இரக்கமின்றி தனது 4 வயது மகளை தந்தையே கழுத்தை அறுத்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் சங்கிரெட்டி மாவட்டம் புல்கல் மண்டலத்தில் உள்ளது கொங்கலூர் கிராமம். இங்கு கூலித்தொழிலாளியான ஜீவன் என்பவர் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது கடைசிக் குழந்தையின் பெயர் அவந்திகா வயது 4. 

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டார் ஜீவன், இதனால் குடும்பம் நடத்த முடியவில்லை. கன் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ஜீவன் மகளை கொன்றுவிட முடிவு செய்தார். பின்னர் நேற்று இரவு குழந்தை அவந்திகா தூங்குபோது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இதேபோன்று பெடப்பள்ளி மாவட்டம், கல்வஸ்ரீரம்பூர் மண்டலம் வெண்ணம்பள்ளி கிராமத்தில் குடிபோதைக்கு அடிமையான ராகுல் என்பவர் பணம் கேட்டு அடிக்கடி தந்தையை துன்புறுத்தி வந்துள்ளார். துன்புறுத்தலைத் தாங்க முடியாமல், தனது மகனை தலையில் இரும்புக் குழாயால் அடித்தார். இதில் ராகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.